HOME      Lecture      சுன்னாவும் பித்அத்களும் விரிவான விளக்கம் அமர்வு 2 | Tamil Bayan- 736   
 

சுன்னாவும் பித்அத்களும் விரிவான விளக்கம் அமர்வு 2 | Tamil Bayan- 736

           

சுன்னாவும் பித்அத்களும் விரிவான விளக்கம் அமர்வு 2 | Tamil Bayan- 736


சுன்னாவும் பித்அத்களும் விரிவான விளக்கம் அமர்வு 2
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : சுன்னாவும் பித்அத்களும் விரிவான விளக்கம் அமர்வு 2
 
வரிசை : 736
 
இடம் : அரேபியன் கார்டன்ஸ், கல்பாக்கம்-
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 20- 08- 22 | 16-09-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
 இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
இன்ஷா அல்லாஹ் இந்த இரண்டாவது பகுதியில நம்ம இன்னும் கொஞ்சம் சுன்னா என்றால் என்ன?  சுன்னத்தை சுன்னா சுன்னத் எல்லாம் ஒன்றுதான் இதனுடைய முக்கியத்துவம் என்ன? இது எப்படி புரிந்து கொள்வது இதெல்லாம் ஏன் பின்பற்ற வேண்டும்.
 
அப்புறம் பித்அத் என்றால் என்ன? பித்அதை ஏன் செய்யக்கூடாது? பித்அத் ஏன் ரொம்ப ஆபத்தான ஒன்று? அதை கொஞ்சம் இன்ஷா அல்லாஹ் நம்ம சுருக்கமாக பார்த்து இந்த அமர்வை நிறைவு செய்வோம்.
 
கவனிங்க பொதுவா சுன்னா سن يسن ல இருந்து سنه சொல்வார்கள் நடைமுறை பழக்கவழக்கம் அதான் அந்த சுன்னா என்ற வார்த்தையினுடைய தமிழ் மொழிபெயர்ப்பு மார்க்கத்தில் சுன்னா என்று சொன்னால் எதற்கு சொல்லப்படும்?
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயிலாக அவர்களின் வழியில் இருந்து அறிவிக்கப்படக்கூடிய அவர்களுடைய சொல்லோ, அவர்களுடைய செயலோ அல்லது, அவர்களுடைய அங்கீகாரமோ, அதற்கு சுன்னா என்று சொல்லப்படும் அவர்களுடைய சொல் என்றால் என்ன உதாரணத்துக்கு : 
 
لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ، وَوَلَدِهِ، وَالنَّاسِ أَجْمَعِينَ
 
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் உங்களில் யாரும் முஃமினாக ஆக முடியாது அவர் என்னை அவருடைய தந்தையை விட அவருடைய பிள்ளைகளை விட நேசிக்கிற வரை அப்ப இது வந்து சொல் இது வந்து சுன்னாவாகும்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 15
 
- 498 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي الْأَحْمَرَ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، ح قَالَ: وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ - وَاللَّفْظُ لَهُ - قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَسْتَفْتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ. وَالْقِرَاءَةِ، بِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَكَانَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ رَأْسَهُ، وَلَمْ يُصَوِّبْهُ وَلَكِنْ بَيْنَ ذَلِكَ، وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ لَمْ يَسْجُدْ، حَتَّى يَسْتَوِيَ قَائِمًا، وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ، لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا، وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ، وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى، وَكَانَ يَنْهَى عَنْ عُقْبَةِ الشَّيْطَانِ. وَيَنْهَى أَنْ يَفْتَرِشَ الرَّجُلُ ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ، وَكَانَ يَخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ» وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ، عَنْ أَبِي خَالِدٍ، وَكَانَ يَنْهَى عَنْ عَقِبِ الشَّيْطَانِ
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய செயல் என்றால் என்ன நான் பார்த்தேன் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் காலை இப்படி விரித்து வைத்து இன்னொரு காலை வலது காலை நிறுத்தி வைத்து உட்கார்ந்தார்கள் அப்போ இது வந்து செயல் புரியுதுங்களா இன்னொன்று அங்கீகாரம். 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 498 (குறிப்பு 2)
 
அங்கீகாரம் என்றால் என்ன ஒரு மனிதர் வந்தாரு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்களோட தொழுகையில் சேர்ந்தார் தொழுது முடிச்சிட்டு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த வார்த்தையை யார் கூறினார்கள்:
 
اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا
 
இந்த வார்த்தை யாரு சொன்னாங்கன்னு கேட்டாப்புல அப்போ சஹாபி சொல்றாரு யா ரசூலுல்லாஹ் நான் தான் சொன்னேனு அப்ப ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படியா 30 வானவர்கள் இதை எடுத்துக் கொண்டு போறதுக்கு போட்டி போட்டாங்க என்று சொல்கிறார்கள் அப்ப அந்த சஹாபி சொல்றாங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் இது அங்கீகாரம் என்று சொல்லப்படும்.
 
அறிவிப்பாளர் : ரிஃபாஆ பின்த் ராஃபிஃ ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி, எண் : 404
 
அப்போ சுன்னா என்று சொன்னால் ஒன்று நபியுடைய நேரடி சொல்லாகா இருக்கலாம், அல்லது நபினுடைய நேரடி செயலாக இருக்கலாம், நபி செய்ததை பார்த்து சஹாபாக்கள் அறிவிப்பதாக இருக்கலாம்.
 
அது மாதிரி நூற்று கணக்குல ஆயிரக்கணக்கில் இருக்கு அல்லது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் ஒரு செயல் செய்யப்பட்டு அந்த செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கீகரித்திருந்தால் ஏற்றுக் கொண்டிருந்தால் அதை மறுக்காமல் இருந்தால் அதுவும் எதுல வந்துடும் சுன்னாவில் வந்துவிடும் புரியுதுங்களா.
 
மார்க்கத்தில் இந்த சுன்னா உடைய சட்டம் இதற்கு என்ன ஹுக்கும் என்றால் அல்லாஹ்வுடைய தீனிலே மார்க்கத்தினுடைய இரண்டாவது மூல ஆதாரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவாக இருக்கிறது.
 
 المصدر الاول அதாவது மார்க்கத்தை எங்கிருந்து எடுப்பீர்களோ மார்க்கத்தை நீங்கள் எங்கிருந்து எடுப்பீர்களோ அந்த முதல் பிறப்பிடம் மார்க்கத்தினுடைய முதல் பிறப்பிடம் எது குர்ஆன் மார்க்கத்தினுடைய இரண்டாவது பிறப்பிடம் مصدر எதிலிருந்து மார்க்கத்தை நீங்கள் எடுப்பீர்களோ மார்க்கத்திற்கு எதை முக்கியமான அடிப்படை ஆதாரமாக ஆக்குவீர்களோ அதனுடைய இரண்டாவது தான் எது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய சுன்னாவாக இருக்கிறது.
 
ஹதீஸ் கவனிங்க மார்க்க அறிஞர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் அல்லாஹுத்தஆலா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, நல்ல நுணுக்கமாக கவனித்துக் கொண்டே வரணும்.
 
இந்த வஹீ என்பது நல்லா கவனிங்க! சொல்லும் கருத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொடுக்கப்பட்டதாக இருந்தால், அது குர்ஆன் நல்லா கவனிங்க! لفظ معني word and meaning sentence and meaning வாக்கியமும் அந்த வாக்கியத்தின் உடைய கருத்தும் இரண்டுமே அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொடுக்கப்பட்டிருந்தால்,
 
அது என்ன? அல்லாஹ்வின் புறத்திலிருந்து மீனிங் கொடுக்கப்பட்டு விட்டது சென்டன்ஸ் ஜும்லா வாக்கியம் கொடுக்கப்படவில்லை வாக்கியத்தை அல்லாஹ் ரசூலுல்லாஹ்கிட்ட விட்டு விட்டான் இந்த மீனிங்கை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கலாம் என்று இருந்தால் அதுதான் ஹதீஸ் So what is the result?
 
ஹதீஸும் வஹி குர்ஆன் வஹியாக இருப்பதைப் போன்று ஹதீஸும் வஹி தான் நல்லா கவனிங்க புரியலன்னா திரும்ப சொல்றேன் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:
 
أَلَا إِنِّي أُوتِيتُ الْكِتَابَ وَمِثْلَهُ مَعَهُ 
 
நான் குர்ஆனும் கொடுக்கப்பட்டிருக்கிறேன் குர்ஆனை போன்றதும் கொடுக்கப்பட்டிருக்கிறேன் குர்ஆனை போன்றது என்றால் அது ஹதீஸ்.
 
அறிவிப்பாளர் : மிக்தாம் இப்னு மஃதீ கரிப் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : அபூ தாவூது, எண் : 4604 
 
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰى‏
 
‏இன்னும், அவர் (இந்த குர்ஆனை) மன இச்சையால் பேச மாட்டார். இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர இல்லை. (அல்குர்ஆன் 53 : 3, 4)
 
அவர்கள் மன இச்சையாக பேச மாட்டார்கள் யாரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசுவது அவர்களுக்கு அறிவிக்கப்படக்கூடிய வஹியை தவிர இல்லை. அப்போ இதுல இருந்து என்ன தெரிகிறது? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேசுவது எல்லாமே வஹி தான், அப்ப அது வார்த்தையாலும் ஓதப்படக் கூடிய வஹியா இருந்தா அது என்னவாகிடும் குர்ஆன் ஆயிடும் இல்ல கருத்து அல்லாஹ்வின் புறத்திலிருந்து வார்த்தை ரசூலுல்லாஹ்வின் புறத்திலிருந்து அது ஹதீஸ் ஆகிடும்.
 
அவ்வளவுதான் வித்தியாசம் பாருங்க இப்ப இந்த இடத்துல ஒரு சின்ன கேப்ல நீங்க ஒரு முக்கியமான விஷயத்தை புரியும் ரொம்ப முக்கியமான விஷயம் நம்ம எப்படி ஷிர்க் செய்யக்கூடிய பித்அத்வாதிகளுடைய வழிகேடுகளை அடையாளம் காணுகின்றோமோ அவர்களை நாம் பிரித்து அந்த வழிகேட்டையும் அந்த வழிகேட்டை பரப்ப கூடியவர்களையும் நாம் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதே போல தான் இன்றைக்கு குர்ஆன் சுன்னாவுடைய பேர்ல அல்லது தவ்ஹீத் என்கிற பெயரில மக்களை வழி கெடுக்கக்கூடிய வழிகேடர்களையும் நாம் தனித்து அடையாளம் காண வேண்டும்.
 
இந்த பிஜே அவரை சேர்ந்தவர்கள் அவங்க உருவாக்கி வைத்திருக்கிற ஜமாத் இவர்களும் வழிகேடர்கள் தான் இந்த ஷிர்க் வாதிகள் ஒரு பக்கம் வழிகேடுன்னு சொன்னா அந்த வழிகேட போல தான் இவர்களுடைய வழிகேடும் இப்ப நீங்க கேப்பிங்க ஏன்? அவங்களும் ஹதீஸ் தான ஆதாரம் என்கிறார்கள் மார்க்கத்தை ஆதாரமாக சொல்றாங்களே!
 
அவங்க பித்அத் செய்யலையே, ஷிர்க் செய்யலையே மௌலது ஓதலையே, இங்க பாருங்க ஒருத்தவன் மவுலது ஓதாதனால ஷிர்க் செய்யாததனால தர்காவுக்கு போகாததனால அவன் சொர்க்கத்துக்கு போயிட முடியாது அவன் நேரான பாதையில இருக்கிறவனாகிட முடியாது.
 
நேரான பாதையில் இருப்பதற்கு அதெல்லாம் தேவை ஆனால், அது மட்டும் தான் நேரான பாதையில இருப்பதற்கு போதுமானது என்று சொன்னால் கிடையாது தொழுதா சொர்க்கத்துக்கு போலாம் அப்போ அதுக்கு என்ன அர்த்தம் ஜக்காத் கொடுக்க தேவையில்லையா! தொழுதா ஜக்காத் கொடுத்தா சொர்க்கத்துக்கு போலாம் அப்ப அதுக்கு என்ன அர்த்தம் ஹஜ்ஜுக்கு போகத் தேவையில்லையா!
 
அப்ப சொல்லுங்க தொழுதாறு, சக்காத்து கொடுத்தாரு, ஹஜ் செஞ்சாரு, நோன்பு வச்சாரு, சொர்க்கத்துக்கு போயிடலாம் அப்போ வியாபாரத்தில் வட்டி வாங்கினால் வட்டி வாங்குகிறார், ஒரு முஸ்லிமை கொலை பண்றாரு சொர்க்கத்துக்கு போயிட முடியுமா மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் நீங்கள் பின்பற்றிய ஆகணும்.
 
என்ன விஷயம் என்ன பிரச்சனை அவங்களோட நீங்க பாருங்க அவங்களுடைய பிரச்சாரத்தை இதெல்லாம் ரொம்ப முக்கியமான பாயிண்ட் அதனால இந்த விஷயத்தை நீங்கள் விளங்கியே ஆகணும் ஆரம்பத்துல என்ன சொன்னாங்க மார்க்கத்தின் ஆதாரம் குர்ஆன் ஹதீஸ் என்றாங்க இல்லையா அல்ஹம்துலில்லாஹ் அதைக் கேட்டுட்டு தான்,
 
மக்கள் எல்லாம் பின்னாடி போனாங்க கரட்டு போய் தான் ஆகணும் அப்படி சொல்றதுல அதுதான் கரெக்ட் இப்போ கடைசியில அவங்களுடைய வழிகேடு எப்போ ஆரம்பிச்சதோ அப்ப கடைசியில இப்ப எப்படி வந்து நின்னாங்க மார்க்கத்தின் ஆதாரம் வஹிதான் எப்படி வந்து நின்னுட்டாங்க மார்க்கதுடைய ஆதாரம் நீங்க எங்க வேணாலும் பாருங்க இததான் ஹைலைட் பண்ணுவாங்க வஹி தான் பாதுகாக்கப்பட்டது மார்க்கத்தினுடைய ஆதாரம் வஹிதான் நாங்க இத தான் அந்த காலத்தில் இருந்து சொல்லிக்கிட்டு இருக்கும் புரியுதா!
 
இல்லையா நீ இந்த காலத்தில் இருந்து சொல்லு அல்லது நூறு வருஷத்துக்கு முன்னாடி, உன்ன மாதிரி வழிகேடன் 100 பேர் சொன்னதிலிருந்து சொல்லு நமக்கு அதெல்லாம் பிரச்சனை கிடையாது. இப்ப என்ன கேள்வி வஹி தான் ஆதாரம்.
 
அப்ப என்ன சொல்ல வராங்க அப்படின்னு சொன்னா இவங்களுடைய கருத்தின் படி சித்தாந்தத்தின்படி இவங்க வஹீ என்று சொல்வது எதை தான் குர்ஆனை மட்டும்தான் வஹி என்று சொல்வது குர்ஆனை மட்டும்தான் அப்ப குர்ஆன் தான் ஆதாரம் அப்ப ஹதீஸ் ஆம்! ஹதீஸும் ஆதாரம்.
 
ஆனால், இங்க தான் வருது அந்த வஹியாகிய குர்ஆனுக்கு முரண்படவில்லை என்றால் இப்ப புதுசா வந்து புகுத்தியாச்சு வஹியாகிய குர்ஆனுக்கு முரண்படவில்லை என்றால் ஹதீஸ் எங்களுக்கு பிரச்சனை இல்லை புரிஞ்சிருச்சா எப்படி வழிகேடு வந்துச்சுன்னு நம்ம என்ன சொல்றோம்.
 
வஹீ தான் ஆதாரம் வஹியில் எதுவும் வரும் ஹதீஸும் வரும் அது ஓதப்படக் கூடிய வஹியாக இருந்தால் அது குர்ஆன் ஓதப்படாத வஹியாக இருந்தால் அது என்ன? ஹதீஸ். சொல்லும் கருத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இருந்தால் அது குர்ஆன். கருத்து அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் சொல் ரசூலுல்லாஹ் உடையதுமாக இருந்தால் அது ஹதீஸ் இரண்டுமே ஆதாரம் இந்த இரண்டுக்கும் இடையிலே முரண்பாடே நடக்காது என்று சொல்கிறோம்.
 
இந்த இரண்டுக்கும் இடையில முரண்பாடு நிகழாது என்று சொல்றோம் குர்ஆனுக்கும் ஸஹீஹான ஹதீஸுக்கும் இடையில முரண்பாடே நடக்காது, நிகழாது அப்படி முரண்பாடு இருக்கிறது என்று ஒருவன் சொன்னால் அவனுடைய அறிவில் தான் முரண்பாடு இருக்கிறது.
 
எதுல முரண்பாடு கிடையாது எந்த ஹதீஸோ குர்ஆனுடைய வசனங்களுக்கு முரண்பட்டதாக இருக்கவே இருக்காது. அப்ப இது எவ்வளவு பெரிய வழிகேட்டை மக்களுக்கு மத்தியில அந்த விஷம் கலந்த தேன் மாதிரி, விஷம் கலந்த பால் மாதிரி ஈஸியா புகுத்திட்டு போய்ட்டாங்க பாருங்க.
 
மக்களை நேர்வழின்னு சொல்லி அழைச்சிட்டு வந்துட்டு கடைசியில எங்க சந்தேகத்தை உண்டு பண்ணிட்டு போயிட்டாங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஹதீஸில் அப்ப நூற்றுக்கணக்கான சஹாபாக்களும், தாபியீன்களும் அறிவிக்கக்கூடிய ஹதீஸா இருந்தாலும் இவர்கள் தங்களுடைய ஒரு அறிவை வைத்து இது இந்த ஆயத்துக்கு முரணா இருக்குன்னு சொல்லிட்டா ஈஸியா அதை மறுத்துட்டு போயிடலாம் உங்களுக்கு நான் சொல்ற விளக்கம் புரியுதா?
 
ஏன்னா ஒரு ஹதீஸ் ஒரு ஆயத்துக்கு முரணா இருக்குன்னு யாரு முடிவு செய்றது அதுக்கும் ஒரு விவஸ்தை இல்லை, ஒரு ஆபரேஷன் பண்ணனும் அதுக்கு ஒரு டாக்டர் தேவை விவஸ்தை இருக்கா இல்லையா? சொல்லுங்க ஒரு கட்டடம் கட்டணம் அந்த கட்டடத்துக்கு ஒரு இன்ஜினியர் தேவை ஒரு இன்ஜினியருக்கு ஒரு விவஸ்தை இருக்கா இல்லையா?
 
இப்ப இவ்வளவு பிரபலமான ஸஹீஹான நூற்றுக்கணக்கான இமாம்கள் ஏற்றுக் கொண்ட ஒரு ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுத்துன்னு சொல்றாங்க அப்படி சொல்றவருக்கு எந்த விவஸ்தையும் தேவையில்லையாம்! அவர் சொன்னார் என்றால் முடிஞ்சு போச்சு ஏற்றுக் கொண்டு போயிடனுமா அப்ப அவர் யாரா தான் இருக்கணும் அப்ப அப்படிப்பட்ட ஒரு தகுதியை கொடுக்கிறதா இருந்தா யாரா இருக்கணும்? அதனால தான் நம்ம சொல்லுறோம் இவர்கள் பிஜேவை நபியாக ஏற்றுக் கொண்டவர்கள்.
 
நம்ம சொல்லும் போது ரொம்ப பேருக்கு கோபம் வரும் உண்மை என்ன அதுதான் இல்லையா புரியவில்லை. கடைசியில சுத்தி வளைச்சு போனா இப்ப நம்ம என்ன சொல்றோம் ரசூலுல்லாஹ் சொன்னா நம்ம கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வோம் என்கிறோம் இல்லையா!
 
ஏன் அவங்க ரசூல் ஏன்னா அவங்க நபி நமக்கு விளங்காதது அவங்களுக்கு விளங்கும் என்கிறோம் இப்ப அவங்க என்ன செய்றாங்க பிஜே சொல்லிட்டா அதுல நாங்க கேள்வியே கேட்க மாட்டோம் பிஜேக்கு முரண்படுதுனா முரண்படுது, பிஜே இது சரியில்லனா சரியில்ல இந்த ஹதீஸ் சயின்ஸ்க்கு முரண்படுதுனு பிஜே சொல்லிட்டாருன்னா ஆமா முரண்படுது,
 
அப்ப என்ன அர்த்தம் ஆச்சு அப்ப அதை எதிர்த்து கேட்க மாட்டோம் அதற்கு மறுப்பு சொல்ல மாட்டோம் அவருக்கு முரண்பட்டா எங்க எல்லோருக்கும் முரண்படுது அப்ப என்ன அர்த்தம் அவரை நீங்கள் உங்களுக்கு நபியாக்கி கொண்டீர்கள் அவரை நீங்க உங்களுக்கு ரசூலாகிட்டீங்க அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு புரியுதா இல்லையா அல்லாஹ் பாதுகாக்கணும்.
 
அப்ப நல்லா கவனிச்சுக்கோங்க மார்க்கத்தினுடைய ஆதாரம் வஹி என்று அவர்கள் சொல்வதற்கும் நம்ம சொல்றதுக்கும் இடையிலே வித்தியாசம் இருக்கு அவர்கள் இந்த வார்த்தையை தவறாக பயன்படுத்தி மக்களை வழி கெடுக்கிறார்கள், வஹி என்பதை குர்ஆனோடு நிறுத்திக் கொண்டு ஹதீசை வஹியில் இருந்து பிரித்து விடுகிறார்கள்.
 
அது தப்பு குர்ஆனும் வஹி ஹதீஸும் வஹி குர்ஆன் எத்தகைய வஹி அதனுடைய சொல்லும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அதனுடைய கருத்தும் அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து அது தொழுகையிலே ஓதப்படக் கூடிய வஹியாகும்.
 
ஹதீஸ் என்பது வஹீ தான் அதனுடைய கருத்து அல்லாஹ்வின் புறத்திலிருந்து சொல் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புறத்திலிருந்து அதனால் தான் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒரே ஹதீஸ் ஒரே கருத்து பல வாக்கியங்களில் வந்திருக்கும் கருத்து ஒண்ணா இருக்கும் வாக்கியங்கள் பல வாக்கியங்களில் இருக்கும் குர்ஆனில் அப்படி இருக்குமா இருக்காது எல்லா வாக்கியங்களும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
 
அப்ப இது ரொம்ப முக்கியமான ஒன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த சுன்னாவை பின்பற்றுவதை குறித்து நமக்கு அதிகமாக வலியுறுத்தி வழிகாட்டுதல்களை நமக்கு நற்செய்திகளை சொல்லி இருக்கிறார்கள்.
 
அதில் ஒரு முக்கியமான ஹதீஸ் பாருங்க அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்க இமாம் முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி பதிவு செய்கிறார்கள்:
 
بَدَأَ الإِسْلاَمُ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ الذين يُحْيُون ما أمات الناس من سنني ‏
 
இஸ்லாம் ஒரு அந்நியமாக தோன்றியது அது தோன்றியது போன்று அந்நியமாக மீண்டும் வரும் அந்நியர்களுக்கு நற்செய்தி உண்டாகட்டும் அப்ப சஹாபாக்கள் கேக்குறாங்க யா ரசூலுல்லாஹ் அது என்ன அந்நியர்கள்? அந்நியர்கள் என்றால் வித்தியாசமா புரியுதா,
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த கேள்விக்கு பதில் சொல்றாங்க என்னுடைய சுன்னத்துகளில் எதை மக்கள் விட்டு விட்டார்களோ அதை மக்களுக்கு மத்தியிலேயே உயிர்ப்பித்து நடைமுறைப்படுத்தக் கூடியவர்கள் அவங்க தான் யாரு இந்த கரீப் என்று சொல்லப்படக் கூடியவர்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், பைஹகி, எண் : 145, 207
 
சரிங்களா நல்லா கவனிங்க அல்லாஹ் சூரா அந்நஹ்ல் உடைய 44 ஆவது வசனத்தில் சொல்கிறான்
 
وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ
 
அத்தாட்சிகளையும் வேதங்களையும் கொண்டு (அத்தூதர்களை அனுப்பினோம்). (இந்த) ஞானத்தை (நபியே!) உமக்கு இறக்கினோம், அம்மக்களுக்காக இறக்கப்பட்ட (இந்த ஞானத்)தை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும்; (அந்த ஞானத்தையும் நபியின் விளக்கத்தையும்) அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும்! (அல்குர்ஆன் 16 : 44)
 
நபியே இந்த குர்ஆனை நாம் உங்களுக்கு இறக்கினோம் எதற்காக மக்களுக்கு நீங்கள் அதை விளக்கிக் கொடுப்பதற்காக அப்போ குர்ஆன் மட்டுமே போதும் என்று இருந்திருந்தால் அல்லாஹுத்தஆலா நபியை அனுப்பி இருக்க தேவையில்லை நபியே இந்த குர்ஆனுக்கு விளக்கம் சொல்லுங்கள் என்று அனுமதி கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
 
அப்போ குர்ஆனும் தேவை அந்த குர்ஆனுக்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய விளக்கமும் தேவை அல்லாஹ் சொல்லி இருக்கான் தொழுங்கள் என்று அந்த தொழுகை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை யார் சொல்லிக் கொடுத்திருக்கா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
 
அல்லாஹ் சொல்றான் ஜகாத் கொடுங்கள் என்று சொல்லி அந்த ஜக்காத்தை எதுல எவ்வளவு கொடுக்கணும், யாருக்கு கொடுக்கணும், எப்படி கொடுக்கணும், இதனுடைய விளக்கமும் யார்சொல்லித்தரா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் சொல்லிட்டான் நீங்க ஹஜ் செய்யுங்க சொல்லி, ஹஜ்ஜ எங்க ஆரம்பிக்கணும், எங்க முடிக்கணும், ஹஜ்ஜில் எது கட்டாயம் இதெல்லாம் யாரு சொல்லி தரா,
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் சொல்லிட்டா நீங்க நிக்காஹ் முடியலன்னு சொல்லி அப்ப நிக்காஹ் எப்படி முடிக்கிறது, அல்லாஹ் சொல்லிட்டா இவங்க எல்லாம் உங்களுக்காக ஹராம், ஆனவங்க அப்ப அந்த ஹராமானவர்களை விட்டு எப்படி விலகுவது இப்படி எல்லாம் நமக்கு விளக்கங்களும், எதிலிருந்து கிடைக்கப்பெறுகிறது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சஹிஹான ஹதீஸ்களிலிருந்து அப்ப நமக்கு மார்க்கத்துல ஆதாரங்கள் குர்ஆனும் மார்க்கத்துடைய பிறப்பிடம், ஹதீஸும் மார்க்கத்தினுடைய பிறப்பிடம், அடிப்படை ஆதாரம். மார்க்கத்தினுடைய பிறப்பிடம். அதுல நமக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது.
 
பலவீனமான ஹதீஸ்களும், பொய்யான ஹதீஸ்களும், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும், நீக்கிவிட்டு ஏதோ ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புறத்திலிருந்து, சஹாபாக்கள் அறிவிக்க அந்த சஹாபாக்களிடம் இருந்து நம்பத் தகுந்த அவர்கள் அங்கீகரித்த தாபியீன்கள் அறிவிக்க அந்த தாபியீன்கள் இடமிருந்து ஹதீஸ் கலையின் உடைய நினைவாற்றல் உடைய ஒழுக்கம் உள்ள பாவத்தைக் கொண்டு அறியப்படாத இமாம்கள் அறிவித்து இருக்கிறார்களோ! 
 
அது எல்லாமே எந்த லிஸ்ட்ல வந்துரும் சஹியான ஹதீஸ் லிஸ்ட்ல வந்துரும். அதுல சந்தேகப்படுறது எப்படின்னு சொன்னா ரசூலுல்லாஹ் உடைய காலத்துல ரசூல்லாஹ் சொல்வதின் மேல் முனாஃபிக்குகள் ஆட்சேபனை செய்தார்களே ரசூலுல்லாஹ் காலத்துல ஒரு கூட்டம் இருந்துச்சு இல்ல முனாஃபிக் என்று ஒரு கூட்டம் அந்த கூட்டம் குர்ஆனை மறுத்ததா? 
 
ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸ மறுத்ததா? சொல்லுங்க ரசூல் அல்லாஹ் உடைய ஹதீஸ மறுத்தது அவங்க குர்ஆனை மறுக்கல முனாஃபிக்குகள் எதை மறுக்கல குர்ஆனை மறுக்கல ரசூலுல்லாஹ் போருக்கு வாங்கன்னு சொல்லுவாங்க எதுக்கு நாங்க போருக்கு வரவேண்டும்.
 
நீ சொன்னா வந்துடனுமானு கேட்பாங்க விலங்குச்சா உங்களுக்கு இந்த போருக்கு போவோம் என்று ரசூலுல்லாஹ் போவாங்க சரி வாங்கன்னு போய் பாதி தூரத்திலேயே நீ செய்தது சரியில்ல இதை நாங்க ஏத்துக்க மாட்டோம் என்று திரும்பி வந்துவிடுவார்கள்.
 
ரசூலுல்லாஹ் சொல்லுவாங்க இந்த போருக்கு எல்லாருமே செலவு பண்ணுங்க தர்மம் குடுங்கன்னு சொல்லிட்டு நீ சொல்லிட்டா நாங்க எங்களுடைய காசுகள் எல்லாம் வந்து கொடுத்துடனுமா நாங்க கொடுக்க மாட்டோம் என்பார்கள் ரசூலுல்லாவை நபின்னு சொல்லுவாங்க.
 
إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
 
நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் சாட்சி பகருகிறோம்” என்று கூறுவார்கள். நிச்சயமாக நீர் அவனது தூதர்தான் என்று அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி பகருகிறான். (அல்குர்ஆன் 63 : 1)
 
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் யாரு சொன்னா முனாஃபிக்குகள் சொன்னார்கள் ஆனா பிரச்சனை எதுல பண்ணிக்கிட்டு இருந்தாங்க ரசூல் அல்லா உடைய சொல்லுல பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க அப்ப அல்லாஹுதஆலா எப்படி தனியா பிரிச்சுட்டான் முனாஃபிக் என்று பிரித்து விட்டான்.
 
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்று சொல்லாதவன் எல்லாம் யாரு காஃபிர் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் சொல்லிக்கிட்டு முஹம்மது ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸில் சந்தேகம் கிளப்புறவங்க யாரு முனாஃபிக் என்று அல்லாஹ்  பிரித்து விட்டான் அப்ப ஹதீஸ்ல குழப்பம் பண்றது இது சாதாரணமான பிரச்சனை அல்ல இது எங்க போய் டேமேஜ் ஏற்படுத்துற பிரச்சனை ஈமானை போய் டேமேஜ் பண்ணி ஈமானுடைய அந்த ஸ்டேட்டஸை எடுத்துட்டு எதை கொண்டு வந்து அங்க வச்சிடும் நிஃபாக் நயவஞ்சகம் முனாஃபிக் என்கிற அந்த நிலையை கொண்டு வந்து வச்சுரும் அல்லாஹ் பாதுகாக்கணும்!
 
இந்த சுன்னத் என்று சொல்லும் பொழுது பித்அத் என்ற ஒரு வார்த்தையை சேர்த்து சேர்த்து பேசுறோம் பித்அ பித்அத் அந்த தாவைதான் நம்ம ஆவா வக்ஃப் செஞ்சு அல்லது தமிழ் வழக்கத்துல வரும்போது பித்அது சுன்னத்து அந்த மாதிரி சொல்றது உண்டு 
 
بدع يبدع إبدع إبداع البدعة 
 
அப்படின்னா என்னன்னா இதுக்கு முன்னாடி ஒன்றை செய்யாம புதுசா ஒன்னு செய்றதுக்கு பேரு பித்அத் என்பார்கள் அப்ப மார்க்கத்தில் பித்அத் என்றால் என்ன? மார்க்கத்தில் சொல்லப்படாமல் இருக்க கூடிய ஒரு செயலை மார்க்கத்தில் சொல்லப்படாமல் இருக்க கூடிய ஒரு செயலை மார்க்கத்தின் பெயரால் புதுமையாக செய்வது.
 
சரி எப்படி உதாரணமாக: இதுல வந்து பல வகை இருக்குது அதுல ஒன்னு நம்ம புரிஞ்சுக்கணும் சரியா இப்ப பாருங்க இந்த பித்அதை அறிஞர்கள் பல வகைகளாக நமக்கு வகைப்படுத்தி சொல்கிறார்கள் ஒன்று என்ன அப்படின்னு சொன்னா அறவே மார்க்கத்துல அப்படி ஒரு காரியமே அமலே இருக்காது அதை செய்யறது எப்படி உதாரணமாக நீங்கள் பார்த்திருப்பீங்க ஷபே பராத் என்று சொல்வார்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா! 
 
ஷபே பராத் கேள்விப்பட்டு இருக்கீங்களா؟ இல்லையா? பள்ளிவாசலில பண்ணுவாங்க அதாவது ரொம்ப விசேஷமா பண்ணுவாங்க எப்படி ரமலானுடைய லைலத்துல் கதர் அதெல்லாம் மேல ஏன்னா அவங்க எப்படி கதை கட்டி வச்சிருக்காங்கன்னா ஒரு பள்ளிவாசலுக்கு போய் இருந்தேன் அந்த பள்ளிவாசல்ல போர்டுல எழுதி போட்டு இருக்காரு இமாம்.
 
என்ன தைரியம் பாருங்க மக்கள் கேட்க மாட்டாங்கன்னு இருந்தா எவ்வளவு பெரிய அத்துமீறல் அதுல போர்டுல எழுதி இருக்காரு ஒரு லைலத்துல் கத்ரு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது அது குர்ஆனில் இருக்கு ஒரு ஷபே பராத் ஆயிரம் லைலத்துல் கதரை விட சிறந்தது என்ன அயோக்கியத்தனம் சொல்லுங்க பாக்கலாம் கேட்டா ஏதாவது ஒரு புக்கு பேரை போட்டுட்டு இருக்கீங்க.
 
நீங்கபோய் தேடி பாருங்க ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை அல்லாஹுத்தஆலா குர்ஆன்ல சொல்லி இருக்கான் ஆயிரம் லைலத்துல் கதிரை விட சிறந்த இரவு ஷபே பராத்னா அது ஒரு குர்ஆன் ஆயத்திலையும் இல்ல ஷாஹிஹான ஹதீஸ்லயும் இல்லை.
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஃபர்லு சொல்லிக் கொடுத்திருக்காங்க சுன்னத்து தொழ சொல்லிக் கொடுத்திருக்காங்க இல்லையா அது போக தஹஜத்து தொழுகை இருக்குது அப்புறம் லுஹா தொழுகை இருக்குது அப்புறம் ஒளூ உடைய காணிக்கை தொழுகை இருக்குது தகியத்துல் மஸ்ஜித் இருக்கு இப்படி எல்லாம் இருக்குதுல்ல இங்க பாருங்க சபே பராத்ல 100 ரக்காத் தொழுகணுமா அந்த நூறு ரக்காயத்துல ஒவ்வொரு ரக்காயத்திலும் சூரத்துல் இக்லாஸ் 10 தடவை ஓதி,
 
தொழுவனுமா இது போக அடுத்த தஸ்பீஹ் வெச்சிருப்பாங்க இப்போ காலத்துக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சம் ஏதாச்சும் கொஞ்சம் லேசாகனும்ல நூறு ரக்காத் தொழுவறதா இருந்தா அப்ப என்ன செஞ்சாங்க அதை குறைச்சு குறைச்சுட்டு இப்ப தஸ்பீஹ் தொழுவேன்னு சொல்லி வச்சிருக்காங்க இப்ப அப்படி ஒரு இரவே முதல்ல இல்ல அப்ப அதுக்கு மேல எக்ஸ்ட்ரா அதுக்கு ஒரு பிட்டிங்,
 
அப்புறம் அடுத்த நாளு ஒரு நோன்பு அப்ப பித்அத் என்று சொல்லும் பொழுது அதனுடைய முதல் வகை என்ன முற்றிலும் மார்க்கத்தில் அறவே எதைப்பற்றி பிரஸ்தாபித்து சொல்லப்படவில்லையோ மார்க்கத்தில் முற்றிலும் எதைப்பற்றி பிரஸ்தாபித்து பிரஸ்தாபித்துனா என்ன ஸ்பெஷலா அதைப்பற்றி சொல்லப்படவில்லையோ அப்படி ஒரு செயலையோ ஒரு நாளையோ குறிப்பாக்கி ஒரு அமலை செய்வது,
 
இப்ப பாத்துக்கோங்க இன்னைக்கு முஸ்லிம் உலகத்துல இந்த சபே பராத்ங்கறது எப்படி என்று சொன்னால் அது வந்து அப்பேர்ப்பட்ட ஒரு புனிதம் இப்ப அத கூட ஒரு பெருநாளக்கி அதுக்கு ஒரு புது டிரஸ் எடுத்து பள்ளிவாசல்ல ஃபுல்லா விளக்கப் போட்டு அப்புறம் மூணு யாசீர் இதுல என்ன விசேஷம் தெரியுமா அதையும் நீங்க தெரிஞ்சுக்கணும் நல்லா கவனிச்சுக்கோங்க இதெல்லாம் உங்களுக்கு வந்து வாழ்க்கையில வந்து நீங்க ஹைலைட் பண்ணி புரிஞ்சுக்கறதுக்கு மிக முக்கியமானது.
 
அதாவது, சுன்னத்தை பின்பற்றக் கூடியவர்கள் அவங்க தான் தவ்ஹீத் வாதி ஒழுங்கான தவ்ஹீத்வாதின்னு சொல்லியிருக்கேன் இப்ப நீங்க சுன்னத் தொழுவுறீங்க இபாதத் பண்றீங்க எது செஞ்சாலும் சரி அல்லஹ்விடத்தில் துஆ கேட்போம் அல்லாஹ்வை தொழுவோம் நமக்கு சொர்க்கம் வேணும் சரியா!  இல்லையா என்னங்க சொல்ல மாட்டேங்கிறீங்க நல்லா வீரமா சொல்லனும்ல அதுக்கு தான் அதான் நம்ம நோக்கம் இல்ல,
 
நாங்க செய்றது வந்து காசு பணத்துக்கு தான் பணக்காரன் ஆகுறதுக்கு தான் எங்களுக்கு பிரச்சினை வராமல் இருப்பதற்கு தான் அப்படின்னு உண்மையா தொழுகையாலி சொல்லுவானா சொல்லுங்க யாராவது உண்மையான தொழுகையாளி எனக்கு பிரச்சனை வரக்கூடாது அதுக்குதாங்க நான் தொழுகிறேன் எனக்கு வியாபாரத்தில் குழப்பம் வரக்கூடாது நஷ்டம் வரக்கூடாது அதுக்குத்தான் நான் தொழுகிறேன் என்று சொல்வானா நான் தொழுவுரது அல்லாஹ்விற்காக தொழுவுறாங்க,
 
நான் தொழுவது சொர்க்கத்திற்காக தொழுகிறேன் அல்லாஹ் எனக்கு பரக்கத்தை வாக்களித்து இருக்கிறான் இன்னைக்கும் தருவான் நாளைக்கும் தருவான் அப்படி தானே நம்ம நம்பிக்கை இங்கே பாருங்க எவன் எல்லாம் இந்த பித்அத் பண்றானோ தர்கா போறானோ இந்த பித்அத் ஆன செயலை செய்றாங்களோ அவங்களுக்கு நோக்கம் அல்லாஹுவை வணங்குகிறதோ சொர்க்கமோ எதுவுமே இருக்காது,
 
எப்படி இந்த சாமியார் கிட்ட போறவன் சிலுவை கிட்ட போறவன் அதாவது சிலைகள் கிட்ட போறவனுடைய நோக்கம் துன்யா மட்டுமே இருக்குமோ அதே போன்று ஷபே பராத்ல மூணு யாசின் ஓதுவாங்க அல்லாஹ் குர்ஆன்ல இதுக்கு என்ன சொல்லி இருக்கான் யாசின ஓது குர்ஆனை ஓது எதுக்கு ஓது சொர்க்கத்துக்காக வேண்டி ஓது இல்லையா எதுக்கு ஓது இதன் மூலமா நேர் வழிய தெரிந்து கொண்டு என்னை எப்படி பயப்படனும் என்னை எப்படி ஈமான் கொள்ளனும் புரியுதா?
 
இல்லையா குர்ஆனை எதுக்குங்க ஓதனும் அல்லாஹ்வை எப்படி ஈமான் கொள்ளனும்னு அல்லாஹ்வுடைய சக்தி எங்க சொல்லப்பட்டிருக்கிறது குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது அல்லாஹ் தன்னை பற்றி எதுல சொல்றான் குர்ஆன்ல சொல்றான் அப்ப ஈமான் காக வேண்டி குர்ஆன் ஓதனும் அல்லாஹ் என்ன சட்டத்தை சொல்லி இருக்கிறான்,
 
இஸ்லாம் அதுக்காக வேண்டி குர்ஆன் ஓதனும் இதனுடைய நன்மையை அல்லாஹ்விடத்தில் சொர்க்கத்தில் எதிர்பார்க்கணும் இல்லையா மூன்று யாசின் ஓதுறாங்களா ஒரு யாசின் வாழ்க்கை நீடிக்கிறதுக்கா பாத்தீங்களா ஆயுள் நீடிக்கிறதுக்கு ஒரு ஆசை யகூதி மாதிரி யகூதிகளைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான்: 
 
وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَنْ يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ
 
இன்னும் (நபியே! பொதுவாக எல்லா) மக்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (உலக) வாழ்க்கையின் மீது பேராசைக்காரர்களாக அவர்களை (-யூதர்களை) நிச்சயமாக நீர் காண்பீர்! அவர்களில் ஒருவர், “அவர் ஆயிரம் ஆண்டு(கள்) உயிரோடு இருக்க வேண்டுமே?” என்று விரும்புவார். அவர் (நீண்ட காலம்) வயது நீட்டிக்கப்படுவது (அல்லாஹ்வின்) தண்டனையிலிருந்து அவரைத் தப்ப வைக்கக்கூடியதில்லை. அல்லாஹ், அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 96)
 
ஆயிரம் வருஷம் இந்த துனியாவுல வாழனும்னு ஆசைப்படுவான் இல்லையா ஒரு முஃமினு அல்லாஹ்விடத்தில் சீக்கிரமாக போயிடுவோம் என்று சொல்லி ஆசைப்பட்டு கிட்டே இருப்பான் அல்ஹம்துலில்லாஹ் போதும் வாழ்ந்தது.
 
யா அல்லாஹ்! நான் சொர்க்கத்தை பாக்கணும்னு சொல்லிட்டு இருக்கிற வரைக்கும் அமல் செய்வோம் என்று இருப்பான் புரியுதா ஒரு யாசீன் எதற்காக வேண்டி இன்னொரு யாசின் வாழ்க்கையில பரக்கத் கிடைக்கணும் காசு துட்டு எதற்காக வேண்டி துட்டு கிடைக்கணும் அப்புறம் இன்னொரு யாசின் எதற்காக வேண்டி சோதனைகள் வரக்கூடாது என்ன வரக்கூடாதா முஸீபத்து வரக்கூடாதான் மொத்தமா துன்யாவைத்தான் வணங்கினார்கள் பாருங்கள் பித்அத்தினாலே இதுதாங்க,
 
அங்க இருக்கும் நீங்க சுன்னதுக்கு வந்தா தான் அங்க அல்லாஹ் ரசூல் ஆகிறது மறுமை தக்குவா இதெல்லாம் இருக்கும் பிதஹத் என்று போனாலே அவனுக்கு அங்கு என்னதான் இருக்கும் துன்யா எப்படி ஆசிரமத்தில போறவனுக்கும் சாமியார் கிட்ட போறவனுக்கும் நோக்கம் எதுவாக இருக்கும் துன்யா தான் இருக்கும் அதே மாதிரி தான் இவங்ககிட்டயும் எதை சுத்தினாலும் துணியா எதை சுத்தினாலும் காசு பணம் காசு பணம் பரக்கத்தான வாழ்க்கை பரக்கத்தான வாழ்க்கை அல்லாஹ் தான் பாதுகாக்கணும். 
 
لا حول ولا قوه الا بالله
 
அடுத்து பாருங்க இது இரண்டாவது வகை பித்அத் உடைய இரண்டாவது வகை அந்த இபாதத்து இருக்கும் இபாதத்தை இருக்கும் ஆனா அதுல எக்ஸ்ட்ரா பிட்டிங் போடுறது புரியல இபாதத்து இருக்கும் அதுல என்ன செய்றது எக்ஸ்ட்ரா பிட்டிங் போடுறது ரசூல்லா செஞ்ச மாதிரி செஞ்சுட்டா அது சப்புன்னு இருக்கும் அது அவங்களுக்கு திருப்தியா இருக்காது,
 
கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டிங் போட்டா அவங்களுக்கு அப்பா பெருசா செஞ்ச மாதிரி இப்ப அதான் சொல்றது இருக்கா இல்லையா மார்க்கத்துல ரசூலுல்லாஹ் காலத்துல அதான் சொன்னாங்களா இல்லையா சஹாபாக்கள் அதான் சொன்னாங்களா இல்லையா இருக்கு இப்ப அந்த அதானா இங்க இப்ப இருக்கு அதான் இருக்கு வித் எக்ஸ்ட்ரா பிட்டிங் என்ன இப்படி பாக்குறீங்க ஆமாங்க அதான் சொல்ல வர கூடிய மோதினார பாருங்க.
 
اعوذ بالله من الشيطان الرجيم
 
என்பாரு بسم الله الرحمن الرحيم என்பாரு அப்புறம் سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر இதெல்லாம் ஒரு ஸ்டைலா சொல்லணும் எப்படி அப்பதான் எல்லாத்துக்கும் ஒரு ஸ்டைல் வச்சிருப்பானுங்க சொல்லி கொடுத்தது எல்லாம் நேரா இருக்கும் கிளீனா இருக்கும் உள்ளத்தில் இருந்து வரக்கூடிய வார்த்தையா இருக்கும் அப்பறம்,
 
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت
 
யாருக்குமே சொல்லித் தராமல் மந்திரம் ஓதுற மாதிரி யா அல்லாஹ் அஸ்தஃபிருல்லாஹ் அப்படியெல்லாம் ஓதிட்டு கடைசியில் அல்லாஹு அக்பர் என்று ஆரம்பிப்பாரு இது எங்கையா அதான் இது ரசூலுல்லாஹ் காலத்துல ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிலால் பாங்கு சொன்னாரா இல்லையா அபு மஹதுரா பாங்கு சொன்னாங்களா இல்லையா எப்படி சொன்னாங்க அல்லாஹ் அக்பர் என்று ஆரம்பித்தார்கள்,
 
ரசூலுல்லாஹ் கேட்டுகிட்டு இருந்தாங்க சஹாபாக்கள் கேட்டுகிட்டு இருந்தாங்க என்ன பிலாலே பிஸ்மில்லா சொல்லாம அதான் சொல்ற என்ன பிலாலே அவூது பில்லாஹி சொல்லாம அதான் சொல்ற என்ன பிலாலி என் மேல சலவாத்து சொல்லாம அதான் சொல்ற சொல்லுங்க பாருங்க அப்ப அதான் இருந்துச்சு இப்ப அந்த அதான் இருக்குதா எக்ஸ்ட்ரா பிட்டிங் இபாதத்துல எக்ஸ்ட்ரா பிட்டிங் போடறது இகாமத்து அதுலயும் எக்ஸ்ட்ரா பிட்டிங் அதேபோல நீங்க ஷாஃபி மஸ்ஜித்ல பார்த்தா இருக்கும் தொழுது முடித்த உடனே,
 
والصلاه والسلام على النبي المصطفى المختار
 
அப்படி என்பார்கள் இது என்னடா புதுசா இருக்குது சலாம் கொடுத்து முடித்த உடனே அதுவும் ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் புரியுதா இல்லையா இந்த மாதிரி இருக்கிற இபாதத்துல என்ன எக்ஸ்ட்ரா பிட்டிங் போட்டாலும் சரி அது எல்லாம் எதுல வந்துடும் ஏன் சலவாத்து சொல்ல கூடாதா ஏன் பிஸ்மில்லாஹ் சொன்னா தப்பா ஏன் அவூதுபில்லாஹ் சொன்னா தப்பா சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுடைய திக்ர் தானே அது சொன்னா தப்பா நீ ரசூல் அல்லாஹ் அதுக்கு சொல்லாத இடத்துல நீ சொன்னா தப்புதான் அத போய் இன்னொரு இடத்தில் நீ சேர்க்கிறது தப்பு நீ தனியா உக்காந்து கொண்டு ஓடிக்கிட்டே இரு சலவாத்து யாரு தடுத்தா நீ தனியா உக்காந்து سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر சொல்லிக்கிட்டே இரு சொர்க்கத்தில் உனக்கு மரம் நட்டுகிட்டு இருப்பாங்க அல்லாஹ் உனக்கு வந்து வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ள எல்லா நன்மையை நிரப்புகிட்டே இருப்பான்,
 
மீசான் தராசை அல்லாஹ் நன்மையால் நிரப்பி விடுவான் ஆனால் அதானுக்கு முன்னாடி சொன்னினா that is the wrong ஏன்னா அது பித்அத் அதான்னு ஒரு இபாதத்தை ரசூலுல்லாஹ் காலத்தில இருந்துச்சு அது இப்படித்தான் இருந்துச்சு அதுல நீ யாரு எக்ஸ்ட்ரா பிட்டிங் போடுவதற்கு புரியல புரியுதா இல்லையா இப்ப எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் தொழுதார்களா இல்லையா?
 
சுபஹானல்லாஹ் தொழுதாங்க எப்படி தொழுதாங்க அல்லாஹ் அக்பர் இல்லையா தொழுகைக்கு வரும் பொழுது என்ன தொழுகையை தொழுக போறோம் மனசுல கொண்டு வந்தாச்சு ஒளு செய்யும்போதே என்ன தொழுகைக்காக ஒளு செய்கிறோம் என்கிறத மனசுல கொண்டு வந்தாச்சு வந்து நின்னாங்க,
 
1 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
 
அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 1.54 குறிப்பு 2
 
அமல்கள் எண்ணங்களை கொண்டு என்ன அமலை செய்யப் போறோம் என்பதை மனசில் கொண்டு வந்தார்கள் அல்லாஹ் அக்பர் முடிஞ்சு அல்லாஹ்வே உனக்காக இந்த லுஹர் தொழுகையை நான்கு ரக்அத் இந்த இமாமை பின்பற்றி கிப்லாவை முன்னோக்கி தொழ போகிறேன் அல்லாஹ் அக்பர் இது என்னடா வித்தியாசமா இருக்கு,
 
اني اصلي هذه الصلاه الظهر
 
சூரா பாத்திஹாவை ஒழுங்கா மனப்பாடம் பண்ணல இவனுங்க ஒழுங்கா இதை மனப்பாடம் பண்ணிக்கிட்டு உட்கார்ந்து இருக்கான் எது மனப்பாடம் பண்ணனும் அதை மனப்பாடம் பண்ணாம விட்டாச்சு இதுல வேற சில பேருக்கு குழப்பம் வந்துடுமா அத சொல்லிக்கிட்டே இருக்கும் போது வேற எங்கேயாவது போய்விடுவாராம் அதனால திரும்பத் திரும்பத் திரும்ப முடிஞ்சு போச்சு சில பேர பார்த்தா இமாமே ருக்குவில போயிருப்பாங்க அதுவரைக்கும் தக்பீர் கட்டி இருக்க மாட்டார்,
 
இந்த ஷாஃபி மஸ்ஜிதுன்னு என்று சொல்வார்கள் அங்கெல்லாம் பாத்தீங்கன்னா இந்த வஸ்வாஸ் பார்ட்டி ரொம்ப அதிகமா இருப்பாங்க நம்ம பக்கத்துல நின்னோனா மாட்டிப்போன நம்ம கேட்டா நியத்து வர மாட்டிக்குதாம் புடிச்சிட்டு வராராம் நியத்தை பெரிய கதையா இருக்கும் உங்க முஹல்லாவில் ஷாஃபி மஸ்ஜித் தான் மஃமூர் பள்ளில பெரிய கூத்து நடக்கும் கால கழுவுவான் தேச்சுக்கிட்டே இருப்பான்,
 
ஏன்னா தேர்ச்சி கழுவனுமாம் எங்கேயாவது விடுபட்டு இருக்குமாம் 30 தடவை கழுவி இருப்பான் இப்ப கூட அவனுக்கு நிம்மதி வராது வஸ்வாஸ் அப்ப இபாதத்து இருக்குது அத என்ன செஞ்சிர்றது இவர் ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் பண்றது நிய்யத் என்றால் என்ன  மனதில் நினைப்பது இப்போ ரமலான்ல நோன்பு வைக்கணும் நோன்புக்கு நிய்யத்தை ரசூலுல்லாஹ் சொல்லிட்டாங்க ராத்திரியில நீங்க வைக்கணும் என்றார்கள் ரமலான் நோன்புக்கு ராத்திரியிலேயே நாளைனுடைய நோன்பை நான் நோக்கப் போறேன் மனசுல உங்களுக்கு இருக்கணும் அந்த நேரத்தில் நீங்கள் படுத்துட்டீங்களா நீங்க சஹர்ல எந்திரிச்சு சாப்பிட்டாலே போதுமானது
 
இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை அல்லாஹ்வுக்காக நான் நாளை நோக்கப் போகிறேன் சுபஹே வந்துடும் என்ன ரசூலுல்லாஹ் சொல்றதுக்குள்ள சாஹரே சாப்பிட்டு போயிருப்பாங்க அவங்க என்ன மக்கள் நிலைமையை பாருங்க இதெல்லாம் என்ன எக்ஸ்ட்ரா பிட்டிங் இப்படி எல்லாம் தீன்ல கிடையாது,
 
புரிஞ்சிச்சா இல்லையா அப்ப எந்த ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் இருக்கிற இபாதத்துல நமக்கு சேர்க்கிறதுக்கு அனுமதியே கிடையாது எது இருக்குதோ அதுதான் புரியுதா இப்ப உதாரணத்திற்கு இப்ப ஹஜ் பெருநாள் வந்துச்சு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகைக்குப் பிறகு தக்பீர் ஓதுவாங்க
 
الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد
 
முடிஞ்சு இமாமும் சொல்லுவாரு பின்னாடி உள்ளவங்க சேர்ந்து சொல்லுவாங்க முடிஞ்சிடுச்சு இவங்க என்ன செய்வாங்க இமாம் ஒரு தடவை சொல்ல அதற்கு அப்புறம் பின்னாடி உள்ளவங்க அவங்க ஒரு மெட்டு போட்டு அதுக்கப்புறம் இவங்க ஒரு முறை சொல்ல அப்புறம் திரும்ப இமாம் ஒரு தடவை சொல்ல அப்புறம் திரும்ப மேட்டு போட்டு பின்னாடி உள்ளவங்க சொல்ல அப்புறம் திரும்ப இமாம் கடைசியா அதற்கு ஒன்னு தனியா வச்சிருப்பாரு
 
لا اله الا الله وحده صدق وعدا
 
அப்பதான் முடிப்பாங்க அப்போ எது சுன்னத்துல ஹதீஸ்ல இருக்கோம் அதுல எல்லாத்துலையுமே எக்ஸ்ட்ரா பிட்டிங் போட வேண்டியது எதுவும் எதுல தான் வரும் பித்அத்ல வரும் அந்த வாக்கியம் நல்ல வாக்கியமாக இருந்தாலும் சரி அது சொல்லப்படக்கூடிய இடம் சேர்க்கப்பட்ட இடம் இருக்குதே அது என்னது அது சொல்லுங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தராத இடம் காட்டித் தராத வழிகாட்டாத இடம் முடிந்ததா பித்அத் இப்ப நீங்க இதை வைத்துக் கொண்டு நம்முடைய மக்கள் கிட்ட உள்ள எல்லாத்தையும் பில்டர் பண்ணி பாக்கணும்,
 
அடுத்து பாருங்க மூணாவது ஒரு விஷயம் இபாதத் இருக்கும் அதை நிறைவேற்றக்கூடிய முறை நிறைவேற்றக்கூடிய அந்த மெத்தட் இருக்கு பாருங்க அது எக்ஸ்ட்ரா பிட்டிங் போடுறது எப்படி இப்ப ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னாங்க திக்குரு செய்யுங்க குர்ஆன்ல இருக்குதே திக்ரு செய்யுங்க என்று சொல்லிட்டு சரியா இப்ப இவங்க என்ன செய்றாங்க,
 
அந்த திக்கரை நாங்க கூடி உட்கார்ந்து செய்வோம் புரியுதா பள்ளிவாசல்ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுதார்கள் தொழுகைக்கு பின்னாடி சுப்ஹானல்லாஹ் 33 தடவை சொன்னார்கள் இருக்கா இல்லையா இவங்க என்ன செய்வாங்க இமாம் சொல்லித் தந்தா நாங்க சொல்லுவோம் இமாம் சுபஹானல்லாஹ் என்று சொன்னவுடனே சுபஹானல்லாஹ் சுபஹானல்லாஹ் இமாம் அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னவுடனே எல்லாரும் அல்ஹம்துலில்லாஹ் என்பார்கள் இமாம் அல்லாஹு அக்பர் என்று சொன்னால் அல்லாஹு அக்பர் என்பார்கள் இவரின் 30 சொன்னாரா 33 சொன்னாரா அதெல்லாம் கணக்கு கிடையாது,
 
முடிஞ்சா அதே போல கடைசியில் லாயிலாஹ இல்லல்லாஹ் எல்லாம் சேர்ந்து கொண்டு லாயிலாஹ இல்லல்லாஹ் இருக்குதா இல்லையா திக்ரு அல்லாஹ் அக்பர் ஆனால் அந்த திக்கரை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செஞ்ச முறையில்லாத வேறு ஒரு முறையில் செய்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கேயாவது ஸஹாபாக்களோடு சேர்ந்து உட்கார்ந்து கொண்டு கூட்டமாக உட்கார்ந்து கொண்டு நான் லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்கிறேன்,
 
நீங்க எல்லாம் சேர்ந்து சொல்லுங்க என்று செஞ்சி இருக்காங்களா செய்யல அப்ப இப்படி செய்தது ஒரு நல்ல காரியமாக இருந்திருந்தால் அதை கண்டிப்பா யாரும் வழிகாட்டி இருப்பா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டி இருப்பார்கள் இல்லையா சரி அப்போ இந்த மாதிரி எந்த ஒரு இபாதத்தா இருக்கட்டும் அதை ரசூலுல்லா காட்டாத முறையில் செய்வது அதுக்கு நம்ம ஒரு ஷேப்பை கொடுக்கிறது நம்ம ஒரு ஷேப்பை அந்த இபாதத்துக்கு கொடுக்கிறது இருக்குதே,
 
நம்ம அதுக்கு என்று ஒரு அமைப்பை ஏற்படுத்துவது இருக்குதே அது என்னவாகும் பித்அத் எதை கூட்டாக செய்ய சொன்னாங்களோ அது கூட்டா இருக்கும் எதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனிப்பட்ட அமலாக விட்டுவிட்டார்களோ அது கற்பிக்கப்பட்டு தனிப்பட்ட அமலாக இருக்கணும் அத விட்டுட்டு நம்ம என்ன செஞ்சிரக்கூடாது அதற்கு ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி மக்களுக்கு மத்தியிலாத நடைமுறைப்படுத்தக் கூடாது ஒரு இபாதத்துக்கு நாம் குறிப்பிட்ட நேரத்தை உருவாக்குவது,
 
ஒரு இபாதத்துக்கு ஒரு   குறிப்பிட்ட நேரத்தை நாம் கொண்டு வரது இப்போ நீங்க பார்த்தீங்கன்னா அரபு நாட்டுல இது இருக்கு இங்கேயும் கூட இருக்கும் அதாவது ரஜபு மாசம் வந்துவிட்டது என்று சொன்னால் எல்லோரும் உம்மராவிற்கு போவார்கள் விசேஷமா ரஜப்ல செய்ற உம்ரான்னு சொல்லிட்டு அப்படி எங்கேயாவது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி இருக்கிறார்களா?
 
உம்மரா இருக்கு ரமலான்ல உம்ரா செய்யுங்க என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமூட்டி இருக்கிறார்கள் மத்தபடி பொதுவா விட்டுட்டாங்க அப்ப எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு இபாதத்தை பொதுவாக விட்டுட்டாங்களோ அதற்கு நம்ம ஒரு நேரத்தை பிக்ஸ் பண்ண கூடாது இப்ப நோன்பு வைக்கிறது இருக்கு நோன்பு என்கிறது நஃபில் இபாதத் எவ்வளவு வேணாலும் நீங்கள் வையுங்கள் நீங்க பாத்து இருப்பீங்க மிஃராஜ் என்று ஒன்றைக் கொண்டு வருவார்கள்,
 
மிஃராஜ் இருக்கு அதற்கு ஒரு நாளை இவங்க பிக்ஸ் பண்றாங்க பாருங்க எங்கேயாவது நமக்கு ஹதீஸ்ல இந்த மாசத்தினுடைய இந்த தேதியில இந்த இரவுல மிஃராஜுக்கு போன அப்படின்னு இருக்கா மிஃராஜுக்கு போன என்று மட்டும் தான் இருக்கு அங்க நடந்த சம்பவங்களை மட்டும் தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அறிவிப்பு செய்து இருக்கிறார்கள் அந்த மாசத்தையோ நாளையோ ரசூலுல்லாஹ் சொல்லி இருக்கிறார்களா!
 
சொல்லலை என்ன ஆச்சு பின்னாடி சஹாபாக்கள் கிட்ட இருந்து ஹதீஸ்களை படித்தவர்கள் வரலாற்றுகளின் குறிப்பு படி இந்த மாதம் நடந்திருக்கலாம் இந்த மாசத்தினுடைய இந்த தேதியில நடந்திருக்கலாம் என்று சொல்லிட்டு அதை ஒரு கருத்தா தான் பதிவு செய்திருக்கிறார்களே!
 
தவிர அப்படி அந்த மாசத்துக்கும் அந்த நாளுக்கும் தனியா ஒரு விசேஷம் என்று சொல்லி நமக்கு எதுவுமே பிரஸ்தாபிக்கப்படவில்லை விசேஷமா நமக்கு சொல்லப்படவில்லை அப்ப என்ன செஞ்சாங்க மிஃராஜ் ராத்திரி அன்னைக்கு ஒரு தொழுகை அப்புறம் அடுத்த நாள் நோன்பு நஃபீல் நோன்பு தானே வச்சா தப்பு என்ன நபீல் நோன்பு தான் அதுல எதற்கு மிஃராஜ் இரவு என்று ஒன்றை குறிப்பிட்டு நீங்க அங்க வைக்கிறீங்க,
 
நஃபில் இபாதத் என்று இருந்தாலும் அதற்கு ஒரு நாளை நீங்கள் ஃபிக்ஸ் பண்ணறீங்க பாருங்க அது பித்அதுல வந்துரும் அப்போ பித்அத் என்பது இருக்கிறதே அது மார்க்கத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டாத ஒன்றை செய்வது அது எப்படி இருக்கலாம் புதுசா ஒரு இபாதத்தை உருவாக்குவதாக இருக்கலாம்.
 
ஒரு இபாதத்தில் எக்ஸ்ட்ரா பிட்டிங் போடுவதாக இருக்கலாம் புரியுதுங்களா அதே போல ஒரு இபாதத்துல வந்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுக்காத முறையில செய்றதா இருக்கலாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காண்பித்துக் கொடுக்காத ஒரு முறையில் செய்வதாக இருக்கலாம்.
 
قُلتُ لِعائِشةَ، أُمِّ المُؤمِنينَ: أيَّ ساعةٍ تُوتِرينَ؟ قالت: ما أُوتِرُ حتى يُؤَذِّنوا، وما يُؤَذِّنونَ حتى يَطلُعَ الفَجرُ. قالتْ: وكان لِرَسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ مُؤَذِّنانِ: بِلالٌ، وعَمْرُو ابنُ أُمِّ مَكتومٍ. فقال رَسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ: إذا أذَّنَ عَمْرٌو فكُلوا واشرَبوا؛ فإنَّهُ رَجُلٌ ضَريرُ البَصَرِ، وإذا أذَّنَ بِلالٌ فارْفَعوا أيديَكم؛ فإنَّ بِلالًا لا يُؤَذِّنُ -كذا قال- حتى يُصبِحَ.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா , நூல் : புகாரி, எண் : 623 குறிப்பு 3
 
இன்னொரு உதாரணம் பாருங்க இது ரொம்ப தெரிஞ்சுக்க வேண்டியது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொன்னாங்க ஏம்பா பஜீர் வெளிச்சம் வர வரைக்கும் சாப்பிடுங்கப்பா என்று சொன்னார்கள் சரியா எதற்கு சஹருக்கு நம்ம ஆளு என்ன செஞ்சான் பேணுதல் ராத்திரி மூணு மணிக்கே நிப்பாட்டிடுவான் நீங்க பார்த்தீங்களா!
 
இல்லையா இந்த ஸஹர் நேரம் போட்டு இருப்பாங்களே அதுக்கும் பஜ்ர் நேரத்திற்கும் இடையிலே இருபது நிமிஷம் அரை மணி நேரம் முக்கா மணி நேரம் இருக்கும் ஒவ்வொரு அட்டையிலையும் பார்த்தீங்கன்னா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பஜீர் வர வரைக்கும் சாப்பிடுங்கள் என்றார்கள் இவர் என்ன செஞ்சாரு எக்ஸ்ட்ரா பிட்டிங் போட்டாரு பேணுதல்,
 
إِذَا أقْبَلَ اللَّيْلُ مِن هَا هُنَا، وأَدْبَرَ النَّهَارُ مِن هَا هُنَا، وغَرَبَتِ الشَّمْسُ فقَدْ أفْطَرَ الصَّائِمُ.
 
அறிவிப்பாளர் : உமர், அப்துல்லாஹ் இப்னு அபூ அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 1954, 1955
 
என்று சொல்லிட்டு அடுத்தது என்ன சொன்னாங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சூரியன் மறைந்த உடனே நோன்ப திறந்திடுங்க என்றார்கள் சூரியன் மறையனும்னா மொத்தமா பூமிக்கு உள்ளார போனும் என்று அவசியம் கிடையாது ஜஸ்ட் பாதி மறைந்தாலே நோன்பை திறந்து விடலாம் மரை ஆரம்பித்தாலே நோன்பை திறந்து விடலாம் அவ்வளவு நோன்பு திறப்பதை அவசரப்படுத்த சொன்னார்கள்,
 
நம்மால் என்ன செஞ்சான் சூரியன் உள்ளார போய் உள்ளார போய் அங்க வக்தே முடிந்திருக்கும் பேணுதல் பத்து நிமிஷம் உட்காருங்க உட்காருங்க என்று யா அல்லாஹ் புரியுதா இல்லையா நான் என்ன கேட்கிறேன் என்றால் ரசூலுல்லாஹி விடவா நாம் நீங்கள் எல்லாம் பேணுதல் உள்ளவராக ஆகிவிட்டோம் சொல்லுங்கள் என்ன விளையாட்டு பாருங்கள் அப்போ ரசூல் அல்லாஹ் செஞ்சது பேணுதல் இல்லாத ஒன்றை செய்துவிட்டார்கள் நாங்க கரெக்டா பேணுதலா செய்கிறோம்,
 
நீங்க எந்த பித்அத்தா இருந்தாலும் சரிங்க அது கடைசியில பாத்தீங்கன்னா அல்லாஹ்வையும் ரசூலையும் சஹாபாக்களையும் தீனையும் கேவலப்படுத்துதல் தான் முடியும் அல்லாஹ் பாதுகாக்கணும் புரியுதா இல்லையா இமாம் மாலிக் என்ன கேட்கிறார்கள் என்றால் ஏங்க அல்லாஹ் மறந்துட்டானா ரசூல் மறந்துட்டாங்களா?
 
நீங்க அல்லாஹ்வுடைய தீன்ல புதுசா ஒன்றை செய்து அதை இபாதத் என்று சொல்லி அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் நீங்க எடுத்துக் கொடுக்க வந்துட்டீங்களா அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் நீங்க அவனுடைய தீன்ல எடுத்துக் கொடுக்க வந்துட்டீங்களா நீங்க அப்போ பித்அத் என்பது இருக்கிறதே மிக மோசமான ஒன்று ஒரு ஆயத்தையும் இரண்டு ஹதீஸையும் நம்ம தெரிஞ்சு இன்ஷா அல்லாஹ் இந்த அமர்வை ஓரளவுக்கு நிறைவு செய்வோம் அல்லாஹுத்தஆலா சூரா அஷ்ஷூரா ஆலோசனை அந்த சூரா உடைய 21 ஆவது வசனத்திலே அல்லாஹ் சொல்கிறான்
 
أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
 
(அல்லாஹ்வின்) மார்க்கத்தில் அல்லாஹ் எதை கட்டளை இடவில்லையோ அதை இவர்களுக்கு சட்டமாக (-மார்க்கமாக) ஆக்கித்தருகின்ற தெய்வங்களும் இவர்களுக்கு உண்டா? (இவர்களுக்கு தண்டனை மறுமையில்தான் என்ற) தீர்ப்பின் வாக்கு மட்டும் இல்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 42 : 21)
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அல்லாஹ் அனுமதிக்காததை இவர்களுக்கு மார்க்கமாக்கி கொடுப்பதற்கு என்ன இவர்களுக்கு அல்லாஹ் வுக்கு நிகராக கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்களா?
 
அப்ப அல்லாஹ்வுடைய தீன்ல அல்லாஹ் அனுமதிக்காததை ஒருவன் செய்வாயானால் ஒருவன் செய்ய சொல்வானேயானால் அவன் என்ன செஞ்சுட்டான் அல்லாஹ்வுக்கு இணையாக ஒருவனை உருவாக்கி விட்டான் இந்த தீனை யாருடைய தீனு அல்லாஹ்வுடைய தீன் அப்ப சட்டங்களை யார் சொல்லித் தரணும்,
 
அல்லாஹ் சொல்லித் தரணும் அல்லாஹ்வுடைய தீன்ல இதை செய்யுங்க தப்பில்லை இதை செய்யுங்க நல்லது இதை செய்யுங்க பரக்கது இதை செய்யுங்க உங்களுக்கு அது கிடைக்கும் அப்படின்னா நீ அல்லாஹ்வுடைய தீன்ல அல்லாஹ்வுக்கு நிகராக ஏற்படுத்திகிட்டயா நீனு அப்ப எந்த அளவுக்கு இது மோசமான குற்றம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஹதீஸ்ல பாருங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்றாங்க இமாம் புகாரி முஸ்லிம் அறிவிக்கிறார்கள்:
 
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ ‏
 
யார் நம்முடைய இந்த காரியத்திலே அப்ப நம்முடைய என்கிறார்கள் யாரை குறிப்பிட்டு சொல்றாங்க அல்லாஹ் ரசூல் நம்முடைய இந்த காரியத்திலே இதில் இல்லாததை புதிதாக செய்வாரோ அது மறுக்கப்பட வேண்டியது.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா , நூல் : புகாரி, எண் : 2697
 
அடுத்து பாருங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னொரு ஹதீஸ்ல சொல்றாங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போதும் இதை சொல்லுவாங்க நம்ம ஓதுனமுள்ள பயான் செய்யும்போது ஆரம்பத்துல இமாம் முஸ்லிம் அறிவிக்கிறார்கள்:
 
كانَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ إذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ، حتَّى كَأنَّهُ مُنْذِرُ جَيْشٍ يقولُ: صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ، ويقولُ: بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ، وَيَقْرُنُ بيْنَ إصْبَعَيْهِ: السَّبَّابَةِ وَالْوُسْطَى، ويقولُ: أَمَّا بَعْدُ؛ فإنَّ خَيْرَ الحَديثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بدْعَةٍ ضَلَالَةٌ، ثُمَّ يقولُ: أَنَا أَوْلَى بكُلِّ مُؤْمِنٍ مِن نَفْسِهِ؛ مَن تَرَكَ مَالًا فَلأَهْلِهِ، وَمَن تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا، فَإِلَيَّ وَعَلَيَّ. [وفي رواية]: كَانَتْ خُطْبَةُ النَّبيِّ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يَومَ الجُمُعَةِ يَحْمَدُ اللَّهَ، وَيُثْنِي عليه، ثُمَّ يقولُ علَى إثْرِ ذلكَ، وَقَدْ عَلَا صَوْتُهُ، ثُمَّ سَاقَ الحَدِيثَ، بمِثْلِهِ.
 
பேச்சிலேயே சிறந்தது அல்லாஹ்வுடைய பேச்சு வழிமுறைகளிலே சிறந்தது ரசூலுல்லாஹ் உடைய வழிமுறை காரியங்களிலே மிகக் கெட்டது என்ன அதில் புதிதாக உருவாக்கப்பட்டது புதிதாக செய்யப்படக்கூடிய ஒவ்வொன்றும் வழிகேடு இன்னொரு ஹதீஸ்ல வருது வழிகேடுகள் எல்லாம் நரகத்தில் தான் கொண்டு போய் சேர்க்கும் அல்லாஹ் நம்மை பாதுகாக்கணும்.
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், எண் : 867 குறிப்பு 4
 
 சோ இது வந்து நம்ம முக்கியமாக விளங்கிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இந்த அதாவது சுன்னா என்பதும் பித்ஆ என்பதும் மிக மிக ஒரு நுணுக்கமான நுட்பமான ஒரு அறிவு நாம் சுன்னத்தை அறிந்து அந்த சுன்னத்தை மட்டுமே வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் பித்அத் என்பதை அறிந்து அந்த பித்அதிலிருந்து நாம் நம்மை விளக்கிக் கொள்ள வேண்டும் புரியுதுங்களா!
 
நம்முடைய அமல்களில் எப்படி நாம் ஷிர்க் கலந்து விடக்கூடாது குஃப்ர் கலந்து விடக்கூடாது நம்முடைய நீயத்துல முகஸ்துதி அல்லது நிஃபாக் நயவஞ்சகம் கலந்து விடக் கூடாது என்று நம்ம ரொம்ப கவனமாக இருக்கின்றோமோ இருக்கணுமோ அதே போல அதே போல நம்முடைய அமல்களில் பித்அத் கலந்து விடக்கூடாது என்று ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் சரிங்களா பித்அத் இருக்குதே ஷிர்கிளையும் வழிகேட்டளையும் அதேபோல இஸ்லாம் உடைய மார்க்கத்தில் இருந்து நம்மை தடம் புரள செய்துவிடும் அல்லாஹ் பாதுகாக்கணும்!
 
அதற்கு நீங்க சமகாலத்தில் வாழக்கூடிய அந்த பித்ஹத்வாதிகல நீங்க பாருங்க அவர்களுடைய ஒவ்வொருத்தருடைய பித்ஹத் ஒவ்வொரு வகையில வித்தியாசப்பட்டு இருந்தாலும் சரி மொத்தமா அவர்களுடைய பிதாத்து ஓவரால் மார்க் போட்டீங்கன்னு சொன்னா கண்டிப்பா இஸ்லாமை விட்டு விலகிப் போய் தான் அவர்கள் நிற்பார்கள் இப்ப முஹர்ரம் மாசம் வந்துச்சு இந்த பஞ்சாங்கற பேர்ல என்னென்ன எல்லாம் பண்ணாங்க பாத்தீங்களா இல்லையா!
 
ஷியாக்கள் ஒரு பக்கம் உருது முஸ்லிம்கள் ஒரு பக்கம் அந்த முஸ்லிம் ஒரு பக்கம் இதெல்லாம் எங்க கொண்டு போய் விடுது பாருங்க புரியுதா இல்லையா உங்களுக்கு நீங்க எங்க சைடு மண்ணடியெல்லாம் வந்து பார்த்தீங்கன்னு சொன்னா சிலை வழிபாடு மாதிரி அப்படியே எல்லாமே நடக்கும் சிலை வழிபாடு மாதிரியே டோட்டலி தீ மிதிக்கிறதுலிருந்து அந்த பஞ்சாவை வைத்து ஊர் ஊரா கொண்டு வந்து அதற்கு வழிபடுவது,
 
அதற்கு பூஜை செய்தலில் இருந்து எல்லாமே நடக்கும் அப்ப பித்அத் என்று போயிட்டாலே அது எங்க கொண்டுட்டு போய் வெளியே விட்டுடும் இஸ்லாமை விட்டு வெளியே கொண்டுட்டு போயி விட்டுடும் அல்லாஹ் பாதுகாக்கணும் ஒரு சில பித்ஹத் இருக்கு அது அமல் சார்ந்த பித்அத் இருக்கும் உதாரணத்திற்கு கத்தம் பாத்தியா ஓதுறாரு அல்லது தொழுகைக்குப் பிறகு கூட்டு துவா ஓதுறாரு பாக்குறதுக்கு அது வெறும் அமல் சார்ந்த சின்ன பித்அத் மாதிரி இருக்கும்,
 
அப்படியே அதிலிருந்து டெவலப் ஆகி டெவலப் ஆகி கடைசில போய் ஒரு பெரிய பித்ஹத்ல போய் விழுந்து எந்த பிதஹத் ஷிருக்குல குஃபூர்ல தள்ளிடுமோ அங்க போய் விழுந்து விடுவாரு அதனால பித்அத் என்பது ஒரு விஷம் மாதிரி விஷத்துல கொஞ்சம் பெருசு என்று பார்க்க முடியுமா முடியாது அறவே அதை விட்டு விலகனும் உம்மத்தை அறவே அதிலிருந்து  நம்ம தடுக்கணும் அப்படி என்று நம்ம இருந்தா தான் அல்ஹம்துலில்லாஹ் நம்ம சுன்னத்துல மட்டுமே பயனிக்க முடியும் சரிங்களா அல்லாஹ் சுபஹானஹூதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய தீனை தெளிவாக புரிந்து கொண்டு அதன்படி அமல் செய்வதற்கு அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
குறிப்பு 1)
 
- 498 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي الْأَحْمَرَ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، ح قَالَ: وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ - وَاللَّفْظُ لَهُ - قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَسْتَفْتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ. وَالْقِرَاءَةِ، بِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَكَانَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ رَأْسَهُ، وَلَمْ يُصَوِّبْهُ وَلَكِنْ بَيْنَ ذَلِكَ، وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ لَمْ يَسْجُدْ، حَتَّى يَسْتَوِيَ قَائِمًا، وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ، لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا، وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ، وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى، وَكَانَ يَنْهَى عَنْ عُقْبَةِ الشَّيْطَانِ. وَيَنْهَى أَنْ يَفْتَرِشَ الرَّجُلُ ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ، وَكَانَ يَخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ» وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ، عَنْ أَبِي خَالِدٍ، وَكَانَ يَنْهَى عَنْ عَقِبِ الشَّيْطَانِ
 
குறிப்பு 2)
 
1 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
 
குறிப்பு 3)
 
قُلتُ لِعائِشةَ، أُمِّ المُؤمِنينَ: أيَّ ساعةٍ تُوتِرينَ؟ قالت: ما أُوتِرُ حتى يُؤَذِّنوا، وما يُؤَذِّنونَ حتى يَطلُعَ الفَجرُ. قالتْ: وكان لِرَسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ مُؤَذِّنانِ: بِلالٌ، وعَمْرُو ابنُ أُمِّ مَكتومٍ. فقال رَسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ: إذا أذَّنَ عَمْرٌو فكُلوا واشرَبوا؛ فإنَّهُ رَجُلٌ ضَريرُ البَصَرِ، وإذا أذَّنَ بِلالٌ فارْفَعوا أيديَكم؛ فإنَّ بِلالًا لا يُؤَذِّنُ -كذا قال- حتى يُصبِحَ.
 
குறிப்பு 4)
 
كانَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ إذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ، حتَّى كَأنَّهُ مُنْذِرُ جَيْشٍ يقولُ: صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ، ويقولُ: بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ، وَيَقْرُنُ بيْنَ إصْبَعَيْهِ: السَّبَّابَةِ وَالْوُسْطَى، ويقولُ: أَمَّا بَعْدُ؛ فإنَّ خَيْرَ الحَديثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بدْعَةٍ ضَلَالَةٌ، ثُمَّ يقولُ: أَنَا أَوْلَى بكُلِّ مُؤْمِنٍ مِن نَفْسِهِ؛ مَن تَرَكَ مَالًا فَلأَهْلِهِ، وَمَن تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا، فَإِلَيَّ وَعَلَيَّ. [وفي رواية]: كَانَتْ خُطْبَةُ النَّبيِّ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يَومَ الجُمُعَةِ يَحْمَدُ اللَّهَ، وَيُثْنِي عليه، ثُمَّ يقولُ علَى إثْرِ ذلكَ، وَقَدْ عَلَا صَوْتُهُ، ثُمَّ سَاقَ الحَدِيثَ، بمِثْلِهِ.
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/